சென்னை நண்பர்கள் நல மன்றம் 39-ஆம் ஆண்டு விழா தலைவர் கோவி பழனி அவர்கள் தலைமையில் தர்ம பிரகாஷ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பங்கேற்று 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் செயலாளர் இரா.பழனி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் ஐ.ஏ.எஸ். காசிஆனந்தன், தனவேல், ஆதிமூலம், மருத்துவர் வேலாயுதம், தொழிலதிபர் லோகநாதன், மருத்துவர் மோகனசுந்தரம், எஸ்.இளங்கோவன், என்.முனுசாமி, எம்.சீனிவாசன், ஜி.செல்லப்பா, எஸ்.வஜ்ரவேலு, கே.சிவலிங்கம், எஸ்.லிங்கமூர்த்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.














