குடியாத்தம் நிருபர் சுவேதா S.கார்த்திகேயன்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி சார்பாக நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் சமத்துவ பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு உள்ளிட்டோர் பங்கேற்றனர் மேலும் சமத்துவ பொங்கல் முன்னிட்டு 7000 கரும்புகளால் குடியாத்தம் நகராட்சி அலுவலகம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது மேலும் இந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் மேலும் சமத்துவ பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான சிலம்பாட்டம் தப்பாட்டம் மயிலாட்டம் தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றதது.














