தடையை மீறி யாத்திரையை துவங்கியதால் ஆம் ஆத்மி கட்சியினர் கைது !

0
288

சென்னை தங்கசாலை அரசு அச்சகம் அருகே ஆம் ஆத்மி கட்சி தமிழ் நாடு சார்பில் மாநில தலைவர் S A N வசிகரன் தலைமையில் ஊழலை ஒழிக்க துடைப்பம் யாத்திரை துவக்கம் நிகழ்ச்சி நடைப்பெற்றது

இதில் ஏராளமான கட்சி தொண்டர் பெண்கள் கலந்து கொண்டனர்

ஊழலை ஒழிக்கவும் லஞ்சம் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் துடைப்பத்தை வைத்து வீட்டை சுத்தம் செய்யவதைப்போல நாட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் யாத்திரை துவங்குவதாக மாநிலத் தலைவர் வசீகரன் தெரிவித்தார்

இந்த நிலையில் 144 தடை உத்தரவு இருப்பதினால் காவல்துறையினர் யாத்திரையை நடத்தக்கூடாது என்று கூறி இதில் கலந்து கொண்டிருந்த 30க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர்

தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவர்
பேட்டி ,திரு,வசீகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here