வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காந்திநகர் நாயுடு தாபா பக்கத்தில் செல்லும் வழியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர் இதில் சேத்து வண்டை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மாறன் மகன் தர்மலிங்கம் வயது 33 என்பதும் இரு தினங்களாக காணாமல் போன அவரை குடும்பத்தினர் மற்றும் போலீசார் தேடி வந்ததும் தெரிய வந்தது












