கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்த இரண்டு வாலிபருக்கு போலீஸ் வலை

0
282

சென்னை தண்டையார்பேட்டை பேரம்பாலு தெருவை சேர்ந்தவர் பாலாஜி இவர் எம்சி ரோடில் உள்ள ஒரு துணிக்கடையில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார் இவருடைய மகன் லோகேஷ் வயசு 18 இவர் தனியார் கல்லூரியில் ஒரு பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் இவர். தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார் நேற்று மாலை கார் ஓட்டிவிட்டு தண்டையார்பேட்டை இளைய முதலில் தெரு வழியாக நடந்து வந்து மணி சைக்கிள் ஷாப் எதிரே உள்ள மதுபான கடை அருகே வந்து கொண்டிருக்கும் பொழுது 25 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் வழிமறித்து மதுபானம் வாங்கி கொடுக்க கோரி மிரட்டி உள்ளனர் தன்னிடம் பணம் இல்லை மதுபானம் வாங்கி கொடுக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார் இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லோகேஷன் குத்தி விடுவதாகவும் இல்லை என்றால் கையில் இருக்கும் செல்போனை கொடு என்று மிரட்டி உள்ளனர் பயந்து போன லோகேஷ் தன் கையில் இருந்த ஆண்ட்ராய்ட் மொபைல் போன் 30000 மதிக்கத்தக்க போனை அவர்களிடம் கொடுத்த உடனே அவர்கள் திருவெற்றியூர் நோக்கி வந்த ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்று விட்டனர் இதனை தொடர்ந்து லோகேஷ் தன் தந்தை பாலாஜியிடம் தகவல் தெரிவிக்க பாலாஜி தன் மகனுடன் சென்று தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு உள்ள சிசிடிவி கேமரா ஆய்வு செய்து தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here