திருவல்லிக்கேணி கெணால் தெருவை சேர்ந்தவர்கள் பாபு(28) இவருடைய தம்பி தீனா(26) இருவரும். மெரினா பீச்சில் குதிரை சவாரி செய்யும் வேலை செய்து வருகிறார்கள் இவர்கள் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது இந்நிலையில் நேற்று பாபு அவருடைய மனைவி அமுதா தம்பி தீனா அவருடைய மனைவி அனிதாவுடன் பூக்கடை பகுதியில் உள்ள கடைக்குச் சென்று அவர்கள் வீட்டிற்கு தேவையான காய்கறி பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி எடுத்துக்கொண்டு பின்னர் டிஎன்பிசி சாலை வழியாக சென்று அங்கிருந்த ஒரு ஓட்டலில் குடும்பத்துடன் சாப்பிடுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர் இவர்களை பின் தொடர்ந்து வந்த ஆட்டோ மற்றும் பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இவர்களை வழி மறைச்சி தகராறில் ஈடுபட்டு வந்தனர் தகராறு மூர்த்தி கைகலப்பானதும் நான்கு பேர் கொண்ட கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாரமாதியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர் இதுகுறித்து தகவல் அறிந்ததும் பூக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் காப்பாற்றி அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி மேலும் சம்பவம் குறித்து பூக்கடை போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் புழல் சிறையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றதாகவும் தப்பி ஓடியவர்களை நான்கு பேரை போலீசார் தேடி வருகிறார்கள் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















