திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரபல தொழிலதிபர் திரு.சிபிசக்ரவர்த்தி அவர்கள் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களை கவுரவம் படுத்தும் விதமாக நிகழ்ச்சியினை தனியார் மஹாலில் ஏற்ப்பாடு செய்திருந்தார்.கொராணா காலகட்டத்தில் ஓய்வின்றி மக்களின் சேவையில் தங்களை அர்ப்பணித்து பல்வேறு இன்னல்களை கடந்து பொதுசேவையில் தங்களை அர்பணித்த மருத்துவர்களை அவர்களது குடும்பத்தினருடன் கவுரவ படுத்தும்விதமாக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.நிகழ்வில் உடுமலை நிருத்திய சாஸ்த்திரா பரதநாட்டிய குழுவைசேர்ந்த குழந்தை நட்சத்திரங்கள் செல்வி சக்திகங்கா,விவேகா ஆகியோரது பரத நாட்டியம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது நிகழ்வின் இறுதியில் விழாவில் கலந்து கொண்ட மருத்துவர்களை கவுரவம் படுத்தும் வகையில் அனைவருக்கும் நினைவுப்பரிசினை லட்சுமி ஜிவல்லரியின் உரிமையாளர் சிபிசக்கரவர்த்தி அவர்கள் வழங்கினார்.












