




பொதுமக்களின் தேவைகளான கழிவுநீர், மின்சாரம், மெட்ரோ வாட்டர், சொத்து வரி கழிவு நீர் வரி குடிநீர் வரி இவைகளில் உள்ள குறைகளை தீர்க்க கிராம சபை கூட்டம் நேற்று 13-வார்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து தெருக்களில் உள்ள ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். பொதுமக்களின் குறைகளை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். குறைகளை விரைவில் தீர்த்து வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இக்கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் மற்றும் மாநகராட்சி உறுப்பினர் திருமதி சுசீலா ராஜா, 13ஆவது வட்டச் செயலாளர் கேபிள் டிவி M. ராஜா, மற்றும் வார்டில் உள்ள திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
















