புழல் சிறையில் விசாரணை கைது பிளேடு வுழுங்கி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, எண்ணூர், முதல் தெருவை சேர்ந்தவர் முன்னாபாய் மகன் பாபு லால் (35),இவர் குற்ற வழக்கு ஒன்றில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். விசாரணை கைதியாக இருக்கும் இவர் நேற்று முன் தினம் சிறையில் பேனா மூடி மற்றும் பிளேடு விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்தார். இது குறித்து சிறைக்காவல்ருக்கு தெரிந்து அவர்கள் பாபு லாலை உடனடியாக காப்பாற்றி ஸிடான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.














