காதலனுடன் ஓடிப்போக நினைக்கும் பெண்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை;

0
170

 

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என் று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வாரத்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தன் படிப்பையும், பெற்றோரையும்,
சகோதரர்களையும், உறவுகளையும்
தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.

உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிகளே சற்றுசிந்தியுங்கள்,

உங்கள் தோழிகளை நரக படுகுழியில்
தள்ளிவிட நீங்களும் ஒரு காரண மாக ஆகிவிடாதீர்கள்,

நீங்கள் நினைத்தால் மட்டுமே ஒடிப்போவதை தடுத்து நிறுத்தலாம்.நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோ,அல்லது உறவினருக்கோ தயவுசெய்து தெறிவித்து விடுங்கள். ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஒட்டு மொத்த சேமிப்பையும், நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்.இன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய்,தகப்பனும் வேண்டாம், அண்ணன் தம்பியும் வேண்டாம், உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி, நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது. நீ இல்லை என்றால் நான் இறந்துவிடுவேன் என்றெல்லாம் சொல்லி ஆக்கிரமிக்கபடுகிறாள்.

இவள் கொண்டு சென்ற செல்வமும், இவளின் இளமையும் தீரும் வரை இவளை அனுபவித்துவிட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள். இறுதியில் இளமையும்,செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள்.அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்.

இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னைமயக்கும் வேலையில் கவனமாகின்றான். ஆனால் இந்த
அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.

உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாகவே, அழகான முறையில் எடுத்து சொல்லுங்கள்,
இதுபோன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக அகற்ற படவேண்டும். பெற்றோர்கள் பணம் ஈட்டுவது, சொத்து சம்பாதிப்பது மட்டுமே தங்கள் வேலை என்று இல்லாமல் பெண் பிள்ளைகளை விழிப்போடு தொடர்ந்து கவனியுங்கள். அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுங்கள். வாழ்க்கையில் உங்களுக்கான கௌரவத்தை தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here