காசிமேடு கடலில் மீன் பிடித்து திரும்பி கொண்டிருந்தவர் மீனவர் தவறி விழுந்து சாவு;

0
277

காசிமேடு கடலில் மீன் பிடித்துக் கொண்டு திரும்பி கொண்டிருந்தவர் படகிலிருந்து தவறி விழுந்து சாவு

எண்ணூர் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் கிளாடி வயது 56 கடந்த திங்கள்கிழமை இவர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 8 பேருடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளார் நேற்று இரவு இவர்கள் மீனை பிடித்து விட்டு கடற்கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர் திரும்பி வரும் வழியில் பலகைகளை அடுக்கும் போது கிளாடி தவறி கடலில் விழுந்து விட்டார் இதையறிந்த மற்றவர்கள் தவறி விழுந்தவரை காப்பாற்றி விரைவாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு இருந்தனர் அங்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர் மரணமடைந்த கிளாடிக்கு மரியம் சுமதி என்ற மனைவியும் 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர் இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here