சிறுமியிடம் பாலியல் வல்லுறவு கொண்ட இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது:

0
337

சென்னை காசிமேட்டில் 15 வயது சிறுமியிடன் பாலியல் அத்துமீறல் செய்த வெங்கடேசன் (37) என்பவர் காசிமேடு ராயபுரம் அனைத்து மகளிர் காவல் துறை ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் கைது செய்யப்பட்டார்

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரில் வசித்து வரும் தம்பதிகளான முருகன் சரசு இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர் முதல் இரண்டு”மகள்களுக்கு திருமணம் முடிந்த நிலையில்

மூன்றாவது மகளான 15 வயது
சிறுமியை கடந்த 28 அன்று காலை 10 மணி அளவில் வீட்டில் இருந்தவரை காணவில்லை என பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்

புகாரை பெற்று கொண்டு வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவீரமாக தேடி வந்த நிலையில்

காசிமேடு சிங்கார வேலன் நகர் 3வது தெருவில் வசிக்கும் வெங்கடேசன் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஜோலார் பேட்டைக்கு கூட்டிசென்று பாலியல் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டது தெரிய வந்தது

இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர்
சென்னை ஜார்ஜ்டவுன் பதினாறாவது நீதிமன்ற நடூவர் முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்தவர்கள் என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் வாடகை வீட்டில் தங்கி கட்டட கூலி வேலை பார்த்து வருபவர்கள் என்பதும் குறிப்பிட தக்கது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here