சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் விக்னேஷ் வயது 28 இவர் சில தினங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் சென்று வஊசி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளைஞர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார் இதனைத்தொடர்ந்து வா உ சி நகரில் உள்ள இளைஞர்கள் நேற்று சிவசந்திரன் வயது 22 சுரேந்தர் வயது 19 பார்த்திபன் ஆகியோர் தண்டையார்பேட்டையில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் உள்ள கருமாரி அம்மன் ஆலயத்தின் அருகே விக்னேஷை கத்தியால் தாக்கியுள்ளனர் பின்னர்அப்பகுதியில் உள்ள இருசக்கர வாகனத்தில் தீ வைத்து எரித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அதனைத்தொடர்ந்து புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெட்டுப்பட்ட விக்ன சை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை மேற்கொண்டு மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
















