வேலூர் மாவட்டம் குடியாத்தம்,
சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடியாத்தம் வருகை தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன்
குடியாத்தம் அருகே கிராமத்தைச் சேர்ந்த சீவூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் ஜெய மாருதி( 17)கடந்த மாதம் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வலுதூக்கும் போட்டியில் நான்கு தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்
சீவூர் கிராமத்தில் உள்ள கல்லூரி மாணவன் ஜெயமாருதி வீட்டிற்கு நேரடியாக சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மாணவனுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
குடியாத்தம் நிருபர் சுவேதா S.கார்த்திகேயன்













