பாஜக திருவெறும்பூர் நகர் மண்டல் சார்பாக திருவெறும்பூரில் வீரத்துறவி இராமகோபாலன், மறைவையொட்டி புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மண்டல் தலைவர் ஆர். பி. பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் சி. இந்திரன் மற்றும் மகளிர் அணி பொது செயலாளர் தமிழ்செல்வி, மனோகரன், கருப்பையா, அருள், அறிவு, காமராஜ், குமரகுரு, விஜய் பாண்டி, ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.













