ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறியதாவது.
கட்சியின் விதி முறைகளின் படியும் எனக்குள் அதிகாரத்தின் கீழ் தென்காசி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி அவர்களின் பரிந்துரையின் படி கீழப்பாவூர் ஓன்றியம் இராஜகோபாலப்பேரியை சேர்ந்த முருகேசன் ஓன்றிய தலைவராகவும் , கழுநீர்க்குளத்தை சேர்ந்த முத்துக்குமார் ஓன்றிய துனை தலைவராகவும், சுப்பரமணியபுரத்தை சேர்ந்த முருகன் ஓன்றிய செயலாளராகவும் , அத்தியூத்தை சேர்ந்த அரிராமர் , ஓன்றிய பொருளாராகவும் , ஆண்டிப்பட்டியை சேர்ந்த ராமசாமி ஓன்றிய அமைப்பாளராகவும் , அத்தியூத்தை சேர்ந்த மாடசாமி ஓன்றிய பிரதிநிதியாகவும் இன்று 14-10-2020 முதல் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் கீழப்பாவூர் ஓன்றிய பொறுப்பாளராக நியமிக்கபட்டுள்ளார்கள் .
பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் எனவும் கட்சியின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு செயல் பட வேண்டும் எனவும் கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் .
மேலும் கீழப்பாவூர் ஓன்றிய பொறுப்பாளராக நியமிக்க பட்டுள்ள அனைவருக்கும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறேன் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார் .
















