வாழும் இலக்கணத்துக்கு இலக்கியமாக திகழ்ந்திருந்தார்.

0
8

வாழும் இலக்கணத்துக்கு இலக்கியமாக திகழ்ந்திருந்தார் அன்பின் இலக்கணமாம தா. சவுண்டையா ஐஏஎஸ்

சென்னை : பணி ஓய்வுக்கு பிறகும் ஒருவர் பாராட்டப்படுவாரேயெனில் அது அவரின் அர்ப்பணிப்பு மிக்க பணியின் வெளிப்பாடாகத்தான் இருக்கும் . அவ்வகையில் வாழும் இலக்கணத்துக்கு இலக்கியமாக திகழ்ந்துள்ளார் அன்பின் இலக்கண மாம் தா. சவுண்டையா ஐ.ஏ.எஸ்.

மிகச் சிறந்த நேர்மையான, தூய்மை யான, எளிமையான அதிகாரியாக மட்டுமல்ல ; அவர் மிகச்சிறந்த மனிதா பிமானியாகவும் இருந்திருக்கிறார். அதனால் அவர் பணியாற்றிய அனை த்து துறைகளிலும் முத்திரை பதித்தவ ராக திகழ்ந்திருக்கிறார்.

ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற க. அய்யாயாசாமி தனது உயர் அதிகாரி யிடம் பழகியதை, பெற்றடைந்த பலன் களை, அந்த அதிகாரியும் ஓய்வுபெற்ற பின்பு புத்தகமாக எழுதி இருப்பதா னது சுயநலம் இல்லாத அவர்களின் பொது நல நோக்கையே வெளிப்படுத் துவதாக இருக்கிறது என பலரும் விய ந்து ,வாழ்த்துரைத்து பேசினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் குடும்பத்தை ச்சேர்ந்த அய்யாசாமி, தான் பணியாற் றிய உணவுப் பொருள் வழங்குதுறை யில் உயர் அதிகாரியாக இருந்த சவு ண்டையாவைப் பற்றி “அன்பின் இலக் கணம் தா. சவுண்டையா ஐ.ஏ. எஸ் ” எனும் நூலை எழுதி, அதன் வெளியீ ட்டு விழாவை மே 23 அன்று, சென்னை கே.கே. நகரிலுள்ள டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கத்தில் நடத்தினார்..

அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் விருத்தாளர்கள் பேர வை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிரு ந்த விழாவை தொழிற்சங்க செயல் பாட் டாளர் ஆர்.துரைசாமி தலைமை யேற்று நடத்தி ஒருங்கிணைத்தார்.

ஜெயகரன், முத்தையாலு, ராகவன், சங்கன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் . இதழாளர் இசைக்கும்மணி வரவேற்று பேசினார்

இதழாசிரியர் மு.முருகேஷ் நூலை வெளியிட , முதல் பிரதியை பேரா. முனைவர் சிவப்பிரகாசம் பெற்றுக் கொண்டார் .இருவரும் நூலை பற்றி யும் , நூலின் ஆசிரியர் பற்றியும் கருத்துரைத்துப் பேசினர்.

முனைவர் மதிமன்னன், இதழாசிரியர் சாவித்திரி கண்ணன், கவிஞர் சொர் ணபாரதி ,கவிஞர் சீனி .ரவீந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்துரைத்து பேசினர்.அவர்கள் பேசியதாவது :

சவுண்டையாவுடனான நட்பும் தொடர் பும் மிக மிக எளிமையானது . தனக்கு கீழ் உள்ளவர்களையும் அவரே தேடி வந்து பார்த்திடுவார் ; தன்னை நாடி வருபவர்களையும் சமமாக உட்கார வைத்து பேசிடுவார் எளிமைத் தன் மையும், நேர்மை ஒழுக்கமும், தூய உணர்வும், தொண்டுள்ளமும் கொண் டவர் ; தடம் பார்த்து நடப்பவர் மனிதர், தடம் பதித்து நடப்பவர் மாமனிதர் என்ற வகையில் சவுண்டையா அவர் கள் மாமனிதராவார்.

சாதாரண நிலையில் இருந்து ஒரு உயர் அதிகாரியாக நேர்மையுடன் பணியாற்றி, பணி நிறைவு செய்து இருக்கிறார் சவுண்டையா . 36 உயர் அதிகாரியின் கீழ் பணியாற்றி இருப் பினும் சவுண்டையா எனும் அதிகாரி யைத் தான் எங்களுக்கு எல்லாம் நினைவில் இருக்கிறது.

தமிழ் மொழி சிறப்பை நன்கு அறிந்தி ருந்து உணர்ந்திருந்த காரணத்தால் தான், சாமானியர்களையும் மதித்து நடத்திட முடிந்திருக்கிறது என்பதை சவுண்டையா போன்றவர்கள் உணர் த்தி இருக்கிறார்கள்.

பணியில் இருக்கும் போது பலர் பாரா ட்டலாம் ; ஆனால் பணி ஓய்வுக்கு பிறகு ஒருவர் பாராட்டப்படுவாரேயெ னில் அது அவரின் அர்ப்பணிப்பு மிக்க பணியின் வெளிப்பாடாகத்தான் இருக்கும் . சவுண்டையா போன்ற இப் படியான மனிதர்களும் இருந்திருக்கி றார்கள் என இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.

இவ்வாறு வாழும் இலக்கணத்துக்கு இலக்கியமாக திகழ்ந்துள்ளார் “அன் பின் இலக்கணமாம் நம் சவுண்டையா மிகச்சிறந்த அதிகாரி மட்டுமல்ல; மிகச் சிறந்த மனிதாபிமானியும் கூட; எனவே அவர் பணியாற்றிய எல்லா துறைகளிலும் முத்திரை பதித்தவராக இருந்திருக்கிறார் .ஊழியராக இருந்த க. அய்யாசாமி தங்களது உயர் அதிகா ரியிடம் பழகியதை, பெற்றடைந்த பய ன்களை எல்லாம் நினைவுபடுத்தி புத்தகமாக எழுதி இருப்பது, சுயநலம் இல்லாத பொது நலத்தையே வெளிப் படுத்துகிறது என பலரும் பாராட்டி பேசினர்

“இது வெறும் புத்தக வெளியீட்டு விழா மட்டுமல்ல இப்புத்தகத்தின் பேசு பொருளாக இருக்கக்கூடிய விழா நாய கர் திரு. சவுண்டையா அவர்களின் மனிதநேய மாண்பமைகளின், செயல் பாடுகளின் வெளிப்பாட்டுக்கான ஒரு அங்கீகாரமும் ஆகும்” என நூலாசிரி யர் க.அய்யாசாமி கருத்துரைத்து பேசினார்.

“தான் பிறந்து வளர்ந்த விருதுநகர் பகுதியில் நெசவுத் தொழிலாளியாக, பட்டாசு தொழிற்சாலையின் குழந்தை தொழிலாளியாக இருந்து , தொலை தூரக் கல்வி முறையில் பயின்று ,ஆசி ரியர் படிப்பு படித்து,, தமிழ் ஆசிரியராக பணியாற்றி, பின்பு டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வு எழுதி ஆட்சியராக பணியாற்றினேன். கீழ்மட்ட நிலையில் இருந்து சிரமப்பட்டு உயர்பதவிக்கு வந்ததினால், விளிம்பு நிலை மக்க ளின் துன்ப துயரங்களைக் கேட்டு, என்னால் முடிந்தவரை அவர்களுக்கு உதவ முடிந்தது ; அதுவே தனக்கான நடைமுறையாக இருந்தது ” என விழா நாயகர் சவுண்டையா ஏற்புரைத்து பேசினார்.

மேடையில் இருந்தவர்களுக்கும் முக் கிய பங்கேற்பாளர்களுக்கும் பயனா டை அணிவித்து சிறப்பு செய்யப்பட் டது .முடிவில் திரைப்பட இயக்குநர் அசோக்மித்திரன் நன்றி தெரிவித்தார் அரசுத்துறை பணியாளர்களும் அதி காரிகளும் எழுத்தாளர்களும் இதழா ளர்களும், இலக்கிய ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்

இதழாளர் இசைக்கும்மணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here