வடசென்னை காங்கிரஸ் கமிட்டி சார்பில் 74 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டன. 74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொண்டாடப்பட்டன. சென்னை ராயபுரம் ஜி.ஏ. ரோட்டில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் எம்.எஸ். திரவியம் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார். இதனையடுத்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி ஏழை எளிய மக்களுக்கு சீருடைகள் வழங்கினர் இவ்விழாவில் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர் இதில் சமூக இடைவெளியை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.













