இன்று காலை பெரியகுளத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் பஸ்ஸில் சைடு பகுதியில் உள்ள கண்ணாடி ஒன்று கிளிப் சரியில்லாமல் விழுந்து உடைந்து விட்டது.
அந்த இருக்கையில் பயணம் செய்த தம்பதியிடம் ஓட்டுனரும் நடத்துனரும் சண்டையிட்டு பஸ்ஸை வழியில் நிறுத்தி அனைத்து பயணிகளையும் சிரமத்துக்கு உட்படுத்தி பயணம் செய்த தம்பதியிடம் 500 ரூபாய் பணத்தை வசூல் செய்த பிறகு தான் பஸ்ஸை எடுத்தார்கள்.
சைடு பகுதியில் இருக்கும் கண்ணாடியில் எந்த கிளிப்பும் சரிவரவில்லை
இவர்கள் குறைக்கு பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து அடாவடி செய்யும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?













