பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 1ல்- 23-8-2024 காலை 11மணியளவில் மண்டல அலுவலகத்தில் 24வது மாமன்ற கூட்டம் 1வது மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு Mc அவர்களின் தலைமையில், மண்டல அலுவலர் திரு.சகுபர் உசேன், செயற் பொறியாளர் திரு. பாபு, சுகாதார துறை அதிகாரி ( AHO ) ரீணா ஆகியோரின் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.இதில் மாமன்ற உறுப்பினர்கள், உதவி செயற் பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மின்சாரத்துறை அதிகாரிகள், மெட்ரோ வாட்டர் அதிகாரிகள், நகரமைப்புத் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்புத் துறை, காவல் துறை, போக்குவரத்து காவல் துறை, உணவு பொருள் நுகர்வோர் வழங்கல் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள், மாநகராட்சி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர், இதில் முன் வைக்கப்பட்ட 64 தீர்மானங்கள் மாமன்ற உறுப்பினர்களால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.தேசிய கீதம் இசைகப்பட்டு இக் கூட்டம் முடிவடைந்தது.
















