சென்னை, கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதிகளில் ரவுடிகள் கத்தியுடன் வலம் வருவதாக காவல்துறைக்கு இரகசிய கிடைத்தது. இதனையடுத்து, ஆர்.கே.நகர். காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது பட்டா கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களோடு சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் சுற்றித்திரிந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரிக்கும் பொழுது கார்னேசன் பகுதியைச் சார்ந்த கோடீஸ்வரன், பத்தா, அஜித் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த ஆறு பட்டாக்கத்தி அருவா போன்ற ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கோடீஸ்வரன் ஆகியோர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மூவரையும் ஆர்.கே. நகர். காவல் துறையினர் கைது செய்து புழல் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.













