திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மின்வாரிய SE அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தொழிற்சங்க முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் அருண் சங்கர், பொறியாளர் ஐக்கிய சங்கம் செந்தில்குமார், மின்சார தொழிலாளர் சம்மேளனம் மாரிமுத்து, மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆனந்தா, கணக்காயர் சங்கம் பொன்ராஜ், எம்பிளாய் பெடரேஷன் மோகன், ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கங்களை சந்திக்க மறுக்கும் வாரிய தலைவரை கண்டித்தும் தொழிற்சங்க உரிமைகளை பறிக்காதே காலி பணியிடங்களை உடனே நிரப்ப கோரியும், அகவிலைப்படி உயர்வை வழங்கிடவும், சரண்டர் லீவு பணப்பையை பறிக்காதே, JMD பதவியினை உடனே திரும்பப்பெறு, நீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்து போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது













