அரசு மேல்நிலைப் பள்ளியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி;

0
175

திருவள்ளூர் செப்.14

பொன்னேரி ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ,பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி வகுப்பு பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கஸ்தூரி தலைமை வகித்தார், உதவி தலைமை ஆசிரியர் லட்சுமிகலா முன்னிலை வகித்தார்,இதில் பொன்னேரி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் மாணவிகளின் மத்தியில் பேரிடர் காலத்தில் தீ தொற்று, வெள்ள அபாயம், புயல் மழை நேரங்களிலும் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது எனவும், அந்நேரங்களில் மற்றவர்களை எவ்வாறு எல்லாம் காப்பாற்ற வேண்டும் உள்ளிட்ட பயிற்சி ஒத்திகையை செய்முறையாக செய்து காட்டி விளக்கத்துடன் எடுத்துரைத்தார், அதேபோன்று மாணவிகளை அழைத்து செயல்முறையையும் செய்து காட்டசொல்லி விளக்கினார் இதில் திரளான பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here