




சென்னை: Tollgate Metro அருகில் எம்ஜிஆர் சாலையில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ தண்டுமாரி அம்மன் திருக்கோவிலில், 35 ஆண்டுகளுக்கு பிறகு 7/4/2025 அன்று காலை அன்று காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை வெகு விமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர் இதில் இந்து சமய அறநிலையத்துறையும் புதிதாக நியமிக்கப்பட்ட அறங்காவலர்களும் கோவில் நிர்வாகத்தினரும் நன்கொடையாளர்களும் விழா சிறப்பாக நடக்க உறுதுணையாக இருந்தனர் இதில் அனைத்து கட்சி பிரமுகர்களும் கட்சி பாகுபாடு இன்றி பங்கேற்றனர். விழாவில் காலை முதல் மாலை வரை பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..
















