சென்னை, திருவொற்றியூர், பழைய நல்ல தண்ணீர் ஓடை குப்பம் கடலில் நேற்று காலை 45 வயது மதிக்கதக்க நிர்வாண ஆன நிலையில் ஆண் பிணம் ஒன்று மிதந்து வந்தது. இதை பார்த்த மீனவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்த்னர். திருவொற்றியூர் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார் ? தற்கொலை செய்துக்கொண்டாரா என விசாரிக்கின்றனர்.















