திருவள்ளூர் மாவட்டம்,
பொன்னேரியில்
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினைச் சேர்ந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பொறியாளர்கள் பொன்னேரி அங்கன்வாடி மைய அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் . 10 ஆண்டுகளாக பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு அளித்ததேர்தல் வாக்குறுதியின்படி உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்க மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் ரகுமாபி,பொருளாளர் பூங்கொடி,மாவட்ட இணை செயலாளர் ஸ்ரீதேவி மற்றும் மீஞ்சூர் வட்டார அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
(நந்தியம்பாக்கம் செய்தியாளர் எஸ் முருகன்)

திருவள்ளூர் மாவட்டம்,













