சென்னை,ராயபுரம்,ஆஞ்சநேயர் நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் வெங்கடபாபு, இவரது ராஜேஸ்வரி(22), இவரது வீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக சந்திரய்யா மகன் நரசிம்மலு(40) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவர்,அம்பத்தூர் ,கார்ப்பரேஷன் அலுவலக்த்திற்குட்பட்ட 7வது வார்டில் மண்டலத்தில் காவலாளியாக உள்ளார். நரசிம்மலு, வீட்டு வாடகை சரியாக தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.இதனால் வீட்டை காலி செய்யுமாறு ராஜேஸ்வரி கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த நரசிம்மலு, இன்ஸ்டாகிராம் மற்றும் முக நூலில் ராஜேஸ்வரி குறித்து தவறாக பதிவிட்டு அவதூறு செய்துள்ளார். இது தொடர்பாக ராஜேஸ்வரி அளித்த புகாரின்படி ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பெண் வன் கொடுமை உள்ளிட்ட சட்டத்தின் கீழ் நரசிம்மலுவை கைது செய்தனர்















