சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இறந்த நிலையில் ராட்சஸ ஆமை ஒன்று கரை ஒதுங்கியது!

0
404

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மாலையில் ராட்சச ஆமை ஒன்று கரை ஒதுங்கியது இதனை கண்ட அப்பகுதி மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீன்வளத்துறை அதிகாரிகள் ராட்சச ஆமையை பரிசோதனை செய்ததில் இறந்துவிட்டது என தெரியவந்தது

மீனவ படகுகளில் அடிபட்டு கரை ஒதுங்கி இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது

ராட்சச ஆமையை காண ஆவலுடன் சிறுவர்கள் அப்பகுதியில் மக்கள் கூடுகின்றனர்

மேலும் ராட்சச ஆமை இறந்துவிட்டதால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் உடனே அப்பகுதியில் இருந்து ராட்சச ஆமையை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here