சென்னை கொருக்குப்பேட்டை ஜே ஜே நகர் பகுதியைச் சேர்ந்த பதினொரு வயது சிறுமி இவர் மளிகை கடைக்கு சென்று வரும் பொழுது அதே பகுதியைச் சேர்ந்த 63 வயது உடைய குமாரசாமி என்பவர் சிறுமியை பாலியல் ரீதியாக தீண்டியதால் சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து சென்னை தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர் புகாரின்பேரில் குமாரசாமியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு துறை சமூக நல அலுவலராக பணியாற்றியதும் இவர் அப்பகுதியில் உள்ள சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் தொல்லை கொடுப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது இதனையடுத்து குமாரசாமியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
















