சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுஞ்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட, சிலுவம்பாளைம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர் மனைவி தவசாயிஅம்மாள், தமிழக முதல்வரின் தாயாரான இவர், திங்கள்கிழமை (அக்.12) இரவு சுமார் 11 மணியளவில், அவரது பூர்வீக இல்லத்தில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது .
தவசாயி அம்மாவை இழந்து வாடும் தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.














