சென்னை கொருக்குப்பேட்டையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நவீன் இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார் இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் சகோதரர்கள் நவீனை கண்டிப்பதற்காக நேரு நகர் அருகே சென்று நவீன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியுள்ளனர் இதில் மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு தப்பி சென்றனர் மீனாம்பாள் நகர் மேம்பாலம் அருகே முழுவதும் குடித்துவிட்டு தாக்கிய 4 பேரையும் மீண்டும் பழிதீர்க்க அரிவாளால் சென்றபோது உணவு விடுதியில் நுழைந்து விட்டனர் இருதரப்பினரும் கத்திகளை வைத்து தாக்கிக் கொண்ட போது கடையின் உரிமையாளர் மணிகண்டன் தடுத்துள்ளார் இதில் அவருக்கு தலையில் அரிவாள் வெட்டு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர் அளித்த புகாரின்பேரில் கடையின் உள்ளே வந்து மோதிக்கொண்ட ஏழு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர் விசாரணையில் கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்ற பாம்பு ராஜேந்திரன் வினோத் மற்றும் ராஜேஷ் ஆகிய நான்கு பேர் மற்றும் நவீன் பாலாஜி சதீஷ்குமார் ஆகிய 3 பேர் மொத்தம் ஏழு பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்















