திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கனிமொழி எம்.பி. டிரம்ஸ் அடித்து ஒட்டு கேட்டார்.
மேலும் அவர் நெசவாளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களுடன் சேர்ந்து நெசவும் நெய்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் நிகழ்வுக்காக நெசவாசளர்கள் விவசாயிகள் என பலதரப்பு மக்களை கனிமொழி எம்.பி.சந்தித்து வருகிறார் அதன் ஒரு பகுதியாக உடுமலை மலையாண்டிபட்டிணம் ஜல்லிபட்டி திருமூர்த்திமலை பகுதியில் கனிமொழி எம்.பி. சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர்ஜெய ராமகிருஷ்ணன் அவர்களும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்களும் மற்றும் கழக உடன்பிறப்புகளும் உடுமலை நகர நிர்வாகிகளும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்













