திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தினர் கோரிக்கை மனு !

0
431

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் தலைமையில் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார் இவ்மனுவில் கூறியதாவது.

1) மாநகராட்சி பகுதி உட்பட்ட பொதுமக்கள் குடிநீர் பற்றாகுறையால் மிகவும் சிரமம் மேற்கொண்டுள்ளனர் எனவே காலையும் மாலையும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தரும்படி கேட்டு கொள்கிறோம்.

2) பாதாள சாக்கடை நிரம்பி வழிந்து தெருக்களில் ஓடி சுகாதாரகேடு விளைவிக்கும் அளவுக்கு தூர்நாற்றம் வீசி கொண்டு இருக்கிறது.அதனை சரி செய்து பொதுமக்களை நோய் தொற்றுலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

3) உய்யகொண்டான் வாய்க்கால் கரை ஓரங்களில் உள்ள குடியிருப்புகள் முழுவதும் சாக்கடை நீர் கலக்காமலும், குப்பைகளை கொட்டி அசுத்தம் விளைவைக்காமலும், கழிவுநீர் வாய்காளில் கலக்காமலும் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் என்று அவ்மனுவில் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here