அதிமுக பொதுக்குழு -பன்னீர்செல்வம் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்ய ஒருவார கால அவகாசம்:

0
191

எடப்பாடி தலைமையில் கடந்த 11.7.21 அன்று நடைபெற்ற பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அப்பீ்ல் மனு உச்சநீதிமன்ற நீதியரசர் தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

பொதுக்குழு அதிமுக சட்ட விதிகளின்படியே கூட்டப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ள நிலையில் பன்னீர் செல்வத்தின் அப்பீல் மனு ஏற்கத்தக்கதல்ல! என்று அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி அரிமா சுந்தரம், வைத்தியநாதன் விஸ்வநாதன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

பன்னீர்செல்வம் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்ய ஒருவார கால அவகாசம் கோரப்பட்டதை தொடர்ந்து வரும் 30ம்தேதி விசாரணை நடத்தப்படும் எனவும் அதற்குள் கூடுதல் மனுவை தாக்கல் செய்யுமாறு பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞரை அறிவுறுத்தி வழக்கை ஒத்தி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here