ஆந்திரா மாநிலம் நகரி தொகுதி.அங்கு MLA-வாக இருப்பவர் திருமதி.R.K.ரோஜா அவர்கள்.ஆந்திரா நகரியில் இருந்து திருத்தணி செல்லும் வழியில் நகரி பைபாஸ் சாலையில் ஆஞ்சநேயர் கோயில் V.K.S திருமண மண்டபம் எதிரில் 2-ஏக்கர் மலைப்பகுதியில் பெட்ரோல் பங்கு வைப்பதற்காக நகரி தொகுதி MLA திருமதி.ரோஜா உறவினர்களுக்கு சொந்தமானதாக கூறப்படுகிறது.அந்த இடத்தில் தூய்மை பணிகள் நடந்து கொண்டு இருந்தன.04.12.2020 அன்று பட்டபகலில் மதியம் 3-மணி அளவில் மலைப்பாறைகளை உடைக்க வெடி வைக்கப்பட்டன.வெடி வெடித்ததும் மலைப்பாறைகள் சிதறி தூக்கி எறியப்பட்டன.பாறைகள் சுமார் 500-மீட்டர் தூரம் பறந்து சென்றன.அதே நேரம் காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி வழியாக நகரி புத்தூர் திருப்பதி செல்லும் தனியார் பாரதி பஸ் சர்வீஸ் பயணிகளை ஏற்றிக்கொன்டு வந்தது.100-அடி தூரத்தில் வெடி வைப்பதாக கூறி தடுத்து நிறுத்தப்பட்டது.ஆனாலும் எதிர்பாராத விதமாக பாறைகள் பறந்து சென்று ( AP O3-TF2700 ) என்ற பாரதி பஸ்ஸின் முன்பக்க கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே பாய்ந்தது.ஜன்னல்கள் வழியாகவும் கற்கள் விழுந்து பயணிகள் மீது தாக்கின.இதில் ஒரு முதியவர் காலில் படுகாயம் மற்றும் சிலர் காயம் அடைந்தனர்.மேலும் 500-மீட்டர் தொலைவில் உள்ள B.C.காலனியிலும் வீடுகள் மீதும் கற்கள் விழுந்தன.இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த சம்பவம் ஆந்திரா நகரி தொகுதி முழுவதும் பரபரப்பு செய்தியாக உள்ளது.இந்த சம்பவம் திட்டமிட்ட செயல் இல்லை என்றாலும் வெடி வைத்த இஞ்சீனியர்களின் அஜாக்கிரதையே காரணம் ஆகும்











