ஆந்திர மாநிலம் ஸ்ரீககுளம் ராமி பட்டினத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (43) மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார் இவருக்கு மனைவி இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர் இவர் கடந்த 10 வருடங்களாக காசிமேடு திடீர் நகரில் வீடு ஒன்று வாடகை எடுத்து வசித்து வந்தார் இவர் காசிமேட்டை பகுதியைச் சேர்ந்த ரகு(45) என்பவருடைய விசைப்படகில் கடந்த 19ஆம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றுவிட்டு 15 நாட்கள் பிறகு இந்த மாதம் மூன்றாம் தேதி கரை திரும்பினார்கள் அவர்கள் பிடித்து வரப்பட்ட மீன்களை விற்பனை செய்துவிட்டு அந்த பணத்தை வாங்கிக் கொண்டு சென்றார் பின்னர் இரவு விசைப்படகில் சக ஊழியர்களுடன் தூங்கப் போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார் காலையில் விசைப்படகு டிரைவர் டோம்பூர்( 49) என்பவர் வந்து பார்த்தபோது நண்பர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர் அதில் தர்மராஜ் மட்டும் காணவில்லை பல இடங்களில் தேடியும் அவருடைய வீட்டில் கேட்டபோது வீட்டிற்கு வரவில்லை என்று கூறியுள்ளார்கள் இந்நிலையில் நேற்று மீன்பிடி ஏலம் விடும் பகுதி அருகே ஒரு உடல் கடலில் மிதந்து வந்தது அதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் காசிமேடு மீன் பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்களின் உதவியுடன் உடலை கரைக்கு எடுத்து பார்த்த போது அது காணாமல் போன தர்மராஜ் என்பது தெரியவந்தது பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காசிமேடு மீன் பிடி துறைமுகம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பிரேத பரிசோதனையில் தலை கையில் காயம் இருந்ததாகவும் கழுத்து நெறிக்கப்பட்டு இருக்கி உள்ளதாக வேத பரிசோதனை அறிக்கையில் வந்துள்ளது அதனைத் தொடர்ந்து காசிமேடு மீன் பிடி துறைமுக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவருடன் வேலை பார்த்த ஒன்பது பேரை காவல்நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர் அந்த விசாரணையில் பைபிள் உமாமகேஸ்வரர்(33) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது மேலும் விசாரணையில் தர்மராஜ் மற்றும் பைபிள் உமா மகேஸ்வரர் ஆகியோர் மது அருந்தியுள்ளனர் அப்போது யார் அதிகம் குடித்தது என்பதில் இருவருக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது இதில் பைபிள் உமா மகேஸ்வரர் தர்மராஜன் கழுத்தை இறுக்கி தலையில் அடித்து கடலில் தள்ளி விட்டுள்ளார் என்பது தெரியவந்தது அதன் பெயரில் கைது செய்யப்பட்ட பைபிள் உமா மகேஸ்வரரை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் இச்சம்பவம் காசிமேடு மீனவர்களிடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது












