சென்னை கொருக்குப்பேட்டை பாரதிநகர் குடிசை மாற்று குடியிருப்பைச் சேர்ந்தவர் சுப்பையா இவருடைய மகன் பழனி (50) இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர் இவர் அதே பகுதியில் மீன் பாடி வண்டி ஓட்டி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த இவருடைய நெருங்கிய உறவினர் பிரசாந்த் என்கிற குள்ள பிரசாந்த்(30) இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார் இவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர் இன்று மாலை 4 மணி அளவில் இருவரும் குடிபோதையில் பேசிக் கொண்டிருந்தனர் அப்போது பழனி அதிக போதையில் இருந்ததால் பிரசாந்தின் மனைவி மற்றும் உறவினர்களை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது ஆத்திரம் தாங்க முடியாமல் பிரசாந்த் என்கிற குள்ள பிரசாத் கோபத்தில் தன்னுடைய வீட்டுக்குச் சென்று காய்கறி நறுக்கும் வைத்திருந்த கத்தியை எடுத்து பழனியின் கழுத்து மற்றும் நெற்றி பகுதியில் சாரமாதியாக கத்தியால் குத்தியுள்ளார் அதில் பலத்த காயமடைந்த பழனி ரத்த வெள்ளத்தில் அதே இடத்திலேயே மயங்கி விழுந்தார் இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை காப்பாற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு பழனியை பரிசோதனை செய்த டாக்டர் முன்பதாகவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து ஆர் கே நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது போலீஸ் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து மேலும் வழக்கு பதிவு செய்து கொலை செய்த பிரசாந்த் என்கிற குல பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் குடிபோதையில் நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்