21-06-2025 அன்று ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு:
பக்தர்கள் தீர்த்த வரிசையில் நீராட வரும் பொழுது வரிசையின் நடுவே தேனியைச் சேர்ந்த இரண்டு வயது கைக்கு குழந்தையுடன் வந்த பெண் முகிலா என்பவர் மயங்கி விழுந்தார் அதிகாரிகளிடம் கேட்ட பொழுது உங்களுக்கு என்ன நாங்க பாத்துக்கிறோம் உயிர் போனால் நாங்க பதில் சொல்வோம் என்று அதிகாரி E o- முத்துச்சாமி, பேஸ் கார்- கமலநாதன் ஆகியோர் பதில் நாங்கள் கூறுகிறோம் என்று அலட்சியமாக கூறுகிறார்கள் அதிகாரிகளை இயக்கும் எஸ் ஓ ஜெயராமன் துணையுடன் செயல்படுகின்றனர் இவர்கள் மீது அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் புகார் அளிக்கின்றனர், எப்பொழுதும் வார இறுதி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகம் வரும் காரணத்தினால் கூடுதல் டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டு கொண்டிருந்தன இப்பொழுது அது நடைமுறையில் இல்லாத காரணத்தினால் பக்தர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர் ஆகையால் வார இறுதி நாட்களில் கூடுதல் டிக்கெட் கவுண்டர் திறக்கப்படும் வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது…














