12/05/2025. அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நாஞ்சில் பீ.ரவி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி:

0
152

மத்திய,மாநில அரசுகளும், மீன்வளதுறையும் மீனவர்களை திருடர்கள் போன்று பார்ப்பதை விட்டுவிட்டு மீனவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட வேண்டும், என்று மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு டாக்டர் நாஞ்சில் பீ.ரவி வேண்டுகோள்விடுத்தார் .பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடிய விசைப்படகுகள், மற்றும் வெளிப்பொருத்து இயந்திரங்கள் பயன்படுத்தக்கூடிய நாட்டுப்படகுகள் போன்றவற்றை ஆய்வு செய்ய மத்திய, மாநில அரசுகள் மூன்று ஆண்டுகள் அல்லது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மீன்பிடி படகுகளை ஆய்வு செய்வதாக இருந்து வந்த வழக்கத்தை மாற்றி தற்போது ஆண்டுக்கு ஒருமுறை மீன்பிடி படகுகளை ஆய்வு என்ற நோக்கம் மீனவர்களை உள்நோக்கத்தோடு பார்ப்பது போன்றும், மீனவர்களை திருடர்கள் போன்று பார்ப்பது போன்று அதிகாரிகள் நோக்கம் இருப்பதாக அனைத்து மீனவர்கள் சங்கம் குற்றம் சாட்டுகின்றது.மாதம் தோறும் விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் மானிய டீசல் பிடிக்கச் செல்லும்போது அனைத்து படகுகளும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா, வார்ப்பு கட்டணம் கட்டப்பட்டுள்ளதா, சொலுஷன் ஃபண்ட் கட்டப்பட்டுள்ளதா, என்று எல்லா ஆய்வுகளும் செய்து தான் மானிய டீசல் வழங்கப்பட்டு வருகிறது.*

*ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாயும் அன்னிய செலவாணியாக ஈட்டி தரக்கூடிய இந்த மீனவர்கள், தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய் 6000க்கு மேற்பட்ட கோடி ரூபாய்கள் அந்நிய செலவாணி ஈட்டி கொடுக்கக்கூடிய இந்த மீனவ சமூகத்தை உள்நோக்கத்தோடு பார்ப்பதை அரசுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வன்மையாக கண்டிக்கின்றோம்.இந்தியா, பாகிஸ்தான் போர் நடந்து கொண்டிருக்கக்கூடிய இந்த பதட்டமான சூழ்நிலையில் கடற்கரையை பாதுகாக்க கூடிய பாதுகாவலராக இருக்கக்கூடிய மீனவர் சமூகத்தின் மீது படகுகளின் ஆய்வு என்ற பெயரில் மீனவர்களுக்கு தொந்தரவு செய்யாமல், இந்த ஆய்வு விசயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும், மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம் என்றும், சில அதிகாரிகளின் கோர பசிக்காக தமிழக மீனவர்களை பலி கொடுக்க வேண்டாம் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம்.*எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் அவர்களும், மீன்வளத் துறை செயலாளார் அவர்களும், மீன்வளத்துறை இயக்குனர் அவர்களும், மீன்வளத்துறை இணை இயக்குனர் அவர்களும் போர்க்கல அடிப்படையில இந்த விசயத்தில் தலையிட்டு மீன்பிடி படகுகளின் ஆய்வு விசயத்தை ஆண்டுக்கு ஒரு முறை என்பதை, ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மீனவர்கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.வடசென்னை மாவட்ட தலைவர் எஸ். பெரியசாமி அவர்கள்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட சிங்காரவேலர் கட்டுமரம் வள்ளம் (2 இன்ஜின்) பைபர் படகு மீனவர்கள் நல சங்கம்.தலைவர் திரு. நந்தன் அவர்கள், செயலாளர் ஏ. சந்திரகுமார், பொருளாளர் எம். ரவிக்குமார், இணைச் செயலாளர் திரு. மாயாண்டி அவர்கள், துணைத் தலைவர் ஏ.ராஜா, முருகன் அவர்கள், ரவி என்கின்ற குள்ள ரவி, திரு ஸ்ரீதர் அவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேஷ், ஏ.சம்பத், நித்யானந்தம், ஜீவானந்தம், கிருஷ்ணன், என்.கன்னியப்பன், ஏ.கிருஷ்ணன், வி.வடிவேல், கரிகாலன், திரு.சேகர் அவர்கள், பி.ஏழுமலை, ஜி.கோவிந்வேல் , எஸ். ரவி, பி.மோகன், சிவலிங்கம், பி.தீபாகரன், மனோகரன் அவர்கள், திரு.சஞ்சய் அவர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here