வடசென்னை பகுதி- பழைய வண்ணாரப்பேட்டை மணிகண்டன் தெருவில் மருத்துவமனை வைத்து மருத்துவம் பார்த்து வந்த பார்த்தசாரதி என்ற மருத்துவர் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றின் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்
வண்ணாரப்பேட்டை பகுதியில் சிறப்பாக மருத்துவம் பார்த்த மருத்துவர் திடீரென இறந்த செய்தி கேட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர் ஊரடங்கு காலகட்டத்திலும் சிறப்பாக மருத்துவம் பார்த்து பலரின் உயிரை காப்பாற்றிய மருத்துவர் நோய் தொற்றால் இறந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்
மேலும் வண்ணாரப்பேட்டை பகுதியில் பல மருத்துவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறப்பது அப்பகுதி முழுவதுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
















