பொலிவியா நாட்டில் நீராவி சிகிச்சை மற்றும் மூலிகைகள் மூலம் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அங்குள்ள மக்களிடம் அதிகளவில் காணப்படுகிறது.
எல் அல்டோ நகரில் உள்ள நீராவி சிகிச்சை மையத்தில் ஏராளமான மக்கள் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாக்கும் பொருட்டு நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர்.
உலகின் ஏழ்மையான நாடுகளில் பொலிவியாவும் ஒன்றாகும்.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்த போதிலும் பொலிவியாவில் இன்னும் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறையையே மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.















