துபாயில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கத்தை கடத்திவந்த பாலசுப்ரமணியத்தை கைதுசெய்து, அவர் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் 40 லட்சம் ரூபாய் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது














