அடுத்தாண்டு தான் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்க வாய்ப்புள்ளதாக சில அதிகாரிகள் தெரிவித்தனர்.பாம்பன் கடலில் 2.05 கி.மீ.,க்கு அமைக்கப்பட்ட ரயில் பாலத்தில், 1914ல், போக்குவரத்து துவங்கியது.இப்பாலத்தின் நடுவில் உள்ள துாக்கு பாலம் வழியாக சரக்கு, கடற்படை கப்பல்கள், மீன் பிடி படகுகள் கடந்து சென்று வருகின்றன.இந்த பாலத்தை ரயில்வே பொறியாளர்கள் பராமரித்து வந்த நிலையில், 5 ஆண்டுகளாக அடிக்கடி துாக்கு பாலத்தின் இரும்பு துாணில் விரிசல் ஏற்பட்டதால், ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.கடந்த 2020ல் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி













