ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம்-தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு:

0
194

இன்று 2.1.2023 கோவை மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புல். எண்704/5 உள்ள இடத்தில் எங்கள் பகுதி மக்களுக்கு சாக்கடை வசதி ஏற்படுத்தி கொடுப்பதற்கு உண்டான பணிகளை சூலூர் பேரூராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. அப்போது அருகில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இந்த இடம் எங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறுகிறார்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் நான் கேட்டபோது மேற்கொண்ட இடம் அரசு ஆவணங்களில் அரசுக்கு சொந்தமான இடம் என்று உள்ளது ஆக கூறி உள்ளார்கள். இது சம்பந்தமாக இன்று எங்கள் பகுதி மக்களோடு இணைந்து எங்கள் பகுதிக்கு உடனடியாக சாக்கடை வசதி ஏற்படுத்தி தரக் கோரியும், இதனால் டெங்கு காய்ச்சலை, வைரஸ், கொசு தொல்லைகள் அதிகமாக இருப்பதால் பல்வேறு நோய்கள் எங்கள் பகுதி மக்களுக்கு ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாக எங்கள் பகுதி மக்களோடு இணைந்து கொசு வலையை போர்த்தி நூதன போராட்டம் நடத்தினோம். மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மற்றும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நாங்கள் மனு அளித்துள்ளோம்.

லோட்டஸ் மணிகண்டன்
நிறுவனத் தலைவர்
ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here