தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு பொருட்களுடன் 2500ரூபாய் கூடிய தொகுப்பினை இன்று தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் காலைல முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது
அதன்படி ராயபுரம், தொகுதிக்குட்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரடியாக கடைகளுக்கு சென்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளுடன் 2500 ரூபாய் பணத்தையும் வழங்கினார்
பொங்கல் பரிசு தொகுப்பினை பெற பொதுமக்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு அதற்கான தேதிகளையும் குறிப்பிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகின்றன
அதன்படி இன்று காலை முதல் டோக்கன் அளிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஒவ்வொரு நியாய விலை கடைகளில் காலையில் 100 பேருக்கும் மாலையில் 100 பேருக்கும் என்ற முறையில் முறையில் முழு அளவு கரும்பு ,அரிசி, முந்திரி போன்ற பொங்கல் தேவையான பொருட்கள் கூடிய தொகுப்பு மற்றும் 2500ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகிறது














