உடுமலைப்பேட்டை வட்டம் குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட வல்லக்குண்டாபுரம் கிராமத்தில் சின்னச்சாமி என்கிற போலி மதுபானம் விற்பனையாளர் கைது செய்யப்பட்டார் குடிமங்கலம் காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் போலி மதுபானங்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்களை கைது செய்யும்படி உடுமலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ் மொழிவேல் அவர்கள் உத்தரவிட்டார் அந்த உத்தரவின்படி குடிமங்கலம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் அவர்களின் தலைமையில் குற்றப்பிரிவு தனிப்படை உதவி ஆய்வாளர் சமாதான பிரபு மற்றும் காவலர் அவர்களும் எஸ் வல்லக்குண்டாபுரம் சேர்ந்த சின்னசாமி என்பவரை போலி மதுபானம் விற்றதாக கைது செய்தனர் அவரை 15 நாள் காவலில் தாராபுரம் கிளை சிறைக்கு அனுப்பி வைத்தனர் மக்கள் இதனால் குடிமங்கலம் காவல்துறையை வெகுவாக பாராட்டினர்














