திருவொற்றியூர் சந்திரசேகரர் திருப்புரசுந்தரி தேரினை வடம் பிடித்து இழுத்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்;

0
208

சென்னை திருவொற்றியூரில் அமைந்தூள்ள தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோவிலில் கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் மாசி மஹாஉற்சவமானது தொடங்கியது 9 நாட்களாக கொண்டாடப்படும் இந்நாளில் முக்கிய நாளான ஏழாம் நாளான இன்று சந்திரசேகரர் திருப்புர சுந்தரி சாமி சிலை அலங்கரிக்கப்பட்டு தேரினில் எழுந்தருள்வர்

இந்நிலையில் இன்று தொடங்கிய இந்த தேரோட்டத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிந்து வடம் பிடித்து தேரினை இழுத்தார் அப்பொழுது தேரின் இருபுறமும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்காக கோவில் நிர்வாகத்தின் சார்பாகவும் காவல்துறை சார்பாகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here