திருவாரூர் மாவட்டம் ஹரித்துவாரமங்கலம் கடைவீதியில் மதுபோதையில் சூர்யா என்கிற இளைஞர் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனையடுத்து ஹரித்துவாரமங்கலம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் மணிகண்டன் தகராறில் ஈடுபட்ட சூர்யாவை பிடிக்கும் பொழுது கையில் வைத்திருந்த கத்தியால் காவலர் மணிகண்டனின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்














