சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அங்கு சென்ற செய்தியாளர்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்திலேயே மழைநீர் வடிகால் பள்ளம் மூடப்படாமல் கம்பிகள் நீட்டிக்கொண்டு இருப்பது பற்றி கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு பதிலளித்த ககன்தீப் சிங் பேடி, எந்த சிஸ்டமும் சரியில்லை . மக்கள்தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். மழைநீர் வழிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் கண்டிப்பாக தடுப்புகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தடுப்புகளில் பாதுகாப்பு குறைவாக இருந்தால் 1913 என்ற எண்ணில் புகாரளிக்கலாம்.” என்றார்.















