காசிமேடு – கல்லறையில் வழிபட பொதுமக்களை அனுமதிக்காததால் வேதனை;

0
333

நாவம்பர் 2 கல்லறை திருநாளை ஒட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களை அடக்கம் செய்த கல்லறைக்கு சென்று கல்லறையை சுத்தப்படுத்தி மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு நோய்த்தொற்றின் காரணமாக தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கல்லறை திருநாளுக்கு பொதுமக்களுக்கு தடை என்ற அறிவிப்பால் கிறிஸ்தவர்கள் வேதனை அடைந்துள்ளனர்
காசிமேடு பகுதியில் உள்ள மிகப் பெரிய அளவிலான கல்லறையில் வடசென்னை பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பந்து தங்களது முன்னோர்களை வழிபடுவது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு கல்லறையின் வெளிப்புற கதவுகளில் ஒட்டப்பட்டிருந்த பேனரில் அனைத்து நிகழ்வுகளும் நோய் தொற்று காரணமாக நடைபெறாது கல்லறைத் தோட்டம் கதவுகள் அடைக்கப்பட்டு இருக்கும் இறைமக்கள் ஒத்துழைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
வழிபட வந்தவர்கள் கல்லறையின் வெளிப்புறத்தில் உள்ள கதவுகளின் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி சென்றனர் வடசென்னை பகுதியைச் சார்ந்த பலரும் கல்லறை திருநாளை முன்னிட்டு வழிபட வந்துவிட்டு ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here